close
Choose your channels

'தனி ஒருவன் 2' படத்தை அடுத்து இன்னொரு 2ஆம் பாக திரைப்படம்.. மோகன் ராஜா மாஸ் திட்டம்..!

Monday, February 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவான ’தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி அதன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தனி ஒருவன் 2’ படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை முடித்துவிட்டு இன்னொரு இரண்டாம் பாகம் படத்தையும் இயக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த படம் தான் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’.

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் சூப்பர் வெற்றி பெற்றதை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை ஏற்கனவே அவர் முடித்து விட்டதாகவும் ’தனி ஒருவன் 2’ படம் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பையும் அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதை ஒன்றையும் எழுதி முடித்துள்ளதாகவும் கூறப்படுவதால் அடுத்தடுத்து மோகன் ராஜா பிஸியாக படங்களை இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.