close
Choose your channels

மெகா ஸ்டார் நடிகருடன் இணையும் தனி ஒருவன் இயக்குநர்…  அசத்தல் வீடியோ!

Thursday, January 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் ஜெயம் ரவி நடித்த “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி“, “சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்“, “சந்தோஷ் சுப்பிரமணியம்“, “தனிஒருவன்“, “வேலைக்காரன்“ என அடுக்கடுக்கான வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் மோகன் ராஜா. இவரது “தனி ஒருவன்“ படம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் அந்தப் படத்தின் 2 ஆம் பாகம் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் “பொன்னியின் செல்வன்” படத்தில் பிசியாகி விட்டார். இதனால் இந்தப் படத்திற்கான அறிவிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் இயக்குநர் மோகன் ராஜா மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லூசிஃபைர் படத்தை தெலுங்கில் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதாநாயகனாக மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நடிகர் சிரஞ்சீவியின் 153 ஆது படம் என்பதால் இப்படத்திற்கு “மெகா ஸ்டார் 153” எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கான பட பூஜையும் நேற்று ஐத்ராபாத் ஃபிலிம் நகரில் உள்ள சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. தற்போது அந்த வீடியோவை மோகன் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்து, நடிகர் பிரித்வி ராஜ் இயக்கியப் படம்தான் லூசிஃபைர். இந்தப் படம் வசூலில் சாதனை படைத்ததோடு பெரும் வெற்றிப் படமாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் படத்தில் விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் போன்றோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு அரசியல் வாதியின் மறைவுக்குப் பின்னர் அவரது மருமகனுக்கும் வளர்ப்பு மகனுக்கும் இடையே நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக எடுக்கப்பட்ட படம்தான் லூசிஃபைர். இந்நிலையில் தெலுங்கில் மூலக் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்ற மாதிரி கதையில் மாற்றங்கள் செய்யப்படும் என இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்து இருக்கிறார்.

மேலும் கொனிடெலா, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க உள்ளன. இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் லஷ்ஷ்மி பூபால வசனத்தில் இந்தப் படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.