வீட்டில் யானை தந்தங்கள்… பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஏற்பட்ட புது நெருக்கடி!

  • IndiaGlitz, [Friday,June 10 2022]

பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க பெரும்பாவூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் வலம்வரும் நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள வீட்டில் ஒரு ஜோடி யானை தந்தங்களை அந்த அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இதுதொடர்பான ஆவணங்களை பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பெரும்பாவூர் வனத்துறை அதிகாரிகள் நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் வைத்திருந்தது தொடர்பாக பெரும்பாவூர் முதல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவந்த நிலையில் கேரள அரசு நடிகர் மோகன்லால் மீதான இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்கிற ரீதியில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்குச் சாதகமாக கேரள அரசு அளித்திருக்கும் மனுவை எதிர்த்து ஜேம்ஸ் மேத்யூ, ஏ.ஏ.புவலோஸ் எனும் இருநபர்கள் புது மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை நேற்று பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேரள அரசு சமர்பித்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் யானை தந்தங்கள் கைப்பற்றபட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் கேரள சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்': ஃபர்ஸ்ட்லுக் டிரெண்டே முடியாத நிலையில் செகண்ட்லுக்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் 'பிரின்ஸ்' என்று வைக்கப்பட்டுள்ள

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் யாஷிகாவின் இரண்டு படங்கள்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் நடித்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டன.

நேற்று திருமணம், இன்று அதிகாலை கணவருடன் நயன்தாரா பயணம்: எங்கே தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவனை நேற்று நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை

டி.இமான் இசையில் பாட்டு பாடிய யுவன்: எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் இசையில் மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'விக்ரம்' அடுத்த பாகத்தில் ராம்சரண் தேஜா? என்ன கேரக்டர் தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உருவாக்கப்படும்