நடிகர் மோகன்லாலில் அடுத்த புதிய அவதாரம்

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'லூசிஃபயர்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு நடிகராக ஐந்து முறை தேசிய விருதும், பத்மஸ்ரீ உள்பட பல பெருமைக்குரிய விருதுகளும் பெற்ற மோகன்லால் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆம், மோகன்லான் விரைவில் இயக்குனராகிறார்.

மோகன்லால் இயக்கும் முதல் படத்திற்கு “ப்ரோஸ் கார்டியன் ஆஃப் காமா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் 3D டெக்னாலஜியில் உருவாகவிருப்பதாக மோகன்லால் தனது இணையதள பிளாக்கில் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் தெரிவிப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நடிகராக பல்வேறு சாதனைகள் புரிந்த மோகன்லால் இயக்குனர் துறையிலும் பல சாதனைகள் நிகழ்த்த அனைவரும் வாழ்த்துவோம்.

More News

ஷங்கரின் 25வது வருடம்: பாராட்டிய பிரபல இயக்குனர்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கடந்த 1993ஆம் ஆண்டு 'ஜெண்டில்மேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

என்ன ஒரு ஃபினிஷிங்: தல தோனிக்கு குவியும் பாராட்டுக்கள்

தோல்வி அடைந்த ஒரு அணியின் கேப்டனை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுவது அனேகமாக உலகில் இதுதான் முதல்முறையாக இருக்கும்.

7 பேர் கைது, சமூக வலைத்தளங்களுக்கு தடை: இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை

இலங்கையில் இன்று காலை நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து

சற்றுமுன் வந்த செய்தி: இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

இலங்கையில் இன்று காலை மூன்று சர்ச்சுகள் மற்றும் நான்கு ஓட்டல்கள் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேர் பலியாகியுள்ள நிலையில் சற்றுமுன் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால்

இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு: விரிவான தகவல்

விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதி போருக்கு பின்னர் இன்று இலங்கையில் பயங்கர வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.