close
Choose your channels

சாமிய காப்பாற்ற யார் இருக்கா? பிரபல இயக்குனரின் 3 வயது மகள் கேள்வி

Wednesday, July 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு காலத்தில் மதமும் ஆன்மீகமும் மனிதனை நல்வழிப்படுத்த இருந்த நிலையில் தற்போது ஆன்மீகம் என்ற பெயரில் மதக் கலவரங்களும், மத பிரச்சனைகளை சீண்டிவிட்டு அரசியல் செய்வதுமான செயல்கள் அதிகம் நடைபெற்று வருகிறது.

மனிதர்களை சாமிகள் காப்பாற்றி நிலை மாறி தற்போது சாமியின் சிலைகளையும் சாமியின் பாடல்களையும் மனிதன் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் தனது மூன்று வயது மகள் ‘சாமியை காப்பாற்ற யார் இருக்கா? என்று எழுப்பிய கேள்வி குறித்து தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

அன்று, மூன்று வயது நிரம்பிய என்‌ மகளுக்கு சாமி கும்பிட கற்றுக்கொடுத்தோம்‌. கடவுளைப்பார்த்து இரு கரம்‌ கூப்பி, அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, எல்லாரும்‌ நல்லா இருக்கணும்னு வேண்டிக்கமா என்றோம்‌. அவளும்‌ சொல்லிக்கொடுத்தது போலே அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, தாத்தா நல்லா இருக்கணும்‌, பாட்டி நல்லா இருக்கணும்‌, அத்தை மாமா நல்லா இருக்கணும்‌, சித்தப்பா நல்லா இருக்கணும்‌' என கூறி தொடர்ச்சியாக சொல்லாத ஒன்றையும்‌ கூறினாள்.‌

'சாமி நல்லா இருக்கணும்‌: சரி தானே ! நம்மை காப்பாற்ற சாமி இருக்கு நம்மிடமிருந்து சாமியை காப்பாற்ற யார்‌ இருக்கா ?

இயக்குனர் மோகன்ராஜாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.