close
Choose your channels

ஹீரோவின் திமிர்ப்பேச்சால் தான் படம் ஓடவில்லை: தியேட்டர் அதிபர் காட்டம்!

Sunday, August 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டா நடித்த ’லைகர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சால் தான் படம் ஓடவில்லை என மும்பையை சேர்ந்த தியேட்டர் அதிபர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்தேவரகொண்டா நடித்த ’லைகர்’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் இரண்டாவது நாளிலேயே வசூல் பாதியாக குறைந்தது என கூறப்பட்டது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள பிரபல திரையரங்கு உரிமையாளர் மனோஜ் தேசாய் என்பவர் விஜய்தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் இந்த படம் தோல்வி அடைய காரணம் என்று கூறியுள்ளார்.

’லைகர்’ படத்தை புறக்கணியுங்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியபோது விஜய் தேவரகொண்டா 'எனது படத்தை பார்க்க பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் படம் பார்க்க வில்லை என்றும் ஏற்கனவே டாப்ஸி, அமீர்கான், அக்சய்குமார் போன்றோர்கள் பேச்சால் தான் அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்தாவது திருந்துங்கள் விஜய் தேவரகொண்டா என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment