மனைவியை 8 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்திய கணவர்: அதிர்ச்சி காரணம்!

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

தனது மனைவி ஆண் குழந்தை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக 8 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் உள்ள பெண் ஒருவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஆனால் அந்த பெண்ணின் கணவர் தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று கண்டிப்புடன் தனது மனைவியிடம் கூறி அவ்வப்போது துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அந்த பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஆனால் கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை என மருத்துவர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டு கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.

இதேபோல் தொடர்ந்து பெண் குழந்தை என தெரிந்து எட்டு முறை கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக நவீன சிகிச்சை செய்ய தன்னை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றதாகவும் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட ஸ்டீராய்டு மற்றும் ஹார்மோன் ஊசிகள் தனக்கு செலுத்தப்பட்டதாகவும் அந்த பெண் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக கணவர் செய்த கொடுமைகளை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

More News

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கு: டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலமும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடுமா? வலுக்கும் சந்தேகம்!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டு உள்ளது

தல அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? ஆச்சரிய தகவல்!

தல அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும்

மேக்கப் போடும்போது கூட தாய்ப்பால்: பிரபல நடிகையின் புகைப்படம் வைரல்!

பிரபல நடிகை ஒருவர் தான் நடிக்கும் படத்திற்காக மேக்கப் போடும்போது கூட கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்து இங்கு தான்....! பிரகாஷ்ராஜ் ட்வீட்.....!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காட்சிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ளது.