சென்னைக்கு பின் வியட்நாமுக்கு செல்லும் முருகதாஸ் டீம்

  • IndiaGlitz, [Sunday,March 12 2017]

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் அதிரடி ஆக்சன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை முடித்தவுடன் இந்த படத்தின் டீம் வியட்நாமுக்கு செல்லவிருப்பதாகவும், அங்கு பாடல் மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகேஷ்பாபு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் மற்றும் வில்லனாக எஸ்.ஜே.,சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 85% முடிந்துவிட்டதாகவும், இம்மாதம் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு, டாக்டராக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி, பரத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ரம்ஜான் விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயம் ரவியின் 'வனமகன்' ரிலீஸ் திட்டஃம்

'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களுக்கு பின்னர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'வனமகன்', விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஜெயம் ரவியின் இன்னொரு 'பேராண்மை'யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது...

கே.வி.ஆனந்தின் 'கவண்' டிரைலர் விமர்சனம்

கோ, அயன், மாற்றான், அனேகன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் 'கவண்'. விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்Ī

100 வருட சினிமாவுலகில் டைட்டிலில் முதலிடம் பெற்ற நாயகி

தமிழ் சினிமா மட்டுமின்றி உலகின் எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் டைட்டிலில் முதலில் வருவது நாயகன் பெயர் தான் என்பது எழுதப்படாத விதி. இதற்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? அல்லது ஹீரோதான் ஒரு படத்தின் முதுகெலும்பு என்பதால் டைட்டிலில் முதல் இடம் கிடைத்தது என்று கூறுவதா? என்று தெரியவில்லை...

அரசியலில் இருந்து விலகுகிறேன் : இரோம் ஷர்மிளா அதிர்ச்சி அறிவிப்பு

பொது பிரச்சனை ஒன்றுக்காக ஒருநாள் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தாலே அதை விளம்பரப்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து வரும் அரசியல் உலகில்,  மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) நீக்கக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளாவுக்கு கிடைத்தது வெறும் 90 வாக்குகளே...

ஆர்.கே ஐடியாவை பின்பற்றுவார்களா புதிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்?

இந்த 21ஆம் நூற்றாண்டில் வானளவு வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் பயன்படுத்தி கற்பனைக்கும் எட்டாத முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது.