close
Choose your channels

சென்னைக்கு பின் வியட்நாமுக்கு செல்லும் முருகதாஸ் டீம்

Sunday, March 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் அதிரடி ஆக்சன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை முடித்தவுடன் இந்த படத்தின் டீம் வியட்நாமுக்கு செல்லவிருப்பதாகவும், அங்கு பாடல் மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகேஷ்பாபு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் மற்றும் வில்லனாக எஸ்.ஜே.,சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 85% முடிந்துவிட்டதாகவும், இம்மாதம் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு, டாக்டராக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி, பரத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ரம்ஜான் விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.