நெடுவாசலுக்காக ஒரு பாடல். பிரபல இசையமைப்பாளர் திட்டம்

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

சமீபத்தில் நடந்து முடிந்த இளைஞர்களின் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்தில் திரையுலகினர்கள் தந்த ஆதரவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டு போராட்டக்கார்களிடமும், மக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தினர்.

குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்காமராஜ் எழுதி இருவரும் இணைந்து பாடிய 'கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடலை கேட்ட ஒவ்வொருவரின் நாடி நரம்பும் முறுக்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கொழுந்துவிட்டு எரியும் 'நெடுவாசல்' பிரச்சனைக்காகவும் அருண்காமராஜ் அவர்களுடன் இணைந்து ஒரு பாடலை கம்போஸ் செய்யவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த பாடலும் ஜல்லிக்கட்டு பாடல் போல பொதுமக்களை நெடுவாசலுக்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் 5ஆம் தேதி ஞாயிறு அன்று நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க ஜி.வி.பிரகாஷ் நெடுவாசலுக்கு நேரில் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

அருண்ஜேட்லியுடன் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ அவசர ஆலோசனை

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தில் பெப்சி, கோக் உள்பட பல வெளிநாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்த வேண்டும்

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

'பாகுபலி 2' சிறப்பு காட்சியில் பிரதமர் மோடி, ராணி எலிசபெத்?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி, உலகமே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது தயாராகி வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படத்திற்கு முதல் பாகத்தை விட பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

தனுஷூக்கு டி.என்.ஏ சோதனை. மதுரை தம்பதியினர் மேலும் ஒரு மனு

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரை மேலூரை சேர்ந்த  கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதும், இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று முன் தினம் தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார் என்பதும் தெரிந்ததே. அன்றைய விசாரணையில் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் நீĪ

தனுஷூக்கு டி.என்.ஏ சோதனை. மதுரை தம்பதியினர் மேலும் ஒரு மனு

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரை மேலூரை சேர்ந்த  கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதும், இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று முன் தினம் தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார் என்பதும் தெரிந்ததே. அன்றைய விசாரணையில் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் நீĪ