close
Choose your channels

அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை: சென்னை வெள்ள பாதிப்பு குறித்து சந்தோஷ் நாராயணன்..!

Thursday, December 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை ஆகியவைதான் இந்த நிலைக்கு காரணம் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.

அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’பத்து ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முழங்கால் அளவு தண்ணீர், மின்வெட்டு ஆகியவை வழக்கமாக உள்ளது. எங்கள் பகுதி வரலாற்று ரீதியாக ஏரி அல்லது தாழ்வான பகுதி அல்ல. சென்னையின் மற்ற பகுதியை விட எங்கள் பகுதியில் திறந்தவெளி நிலங்கள் குளங்கள் உள்ளது. ஆனால் வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை ஆகியவை தான் மழை நீர் மற்றும் கழிவு நீர் ஒன்று சேர்வதற்கு வழி வகுத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நோய் ஏற்பட்டு சில சமயம் மரணமும் ஏற்படுகிறது.

ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும் மீட்பு மற்றும் முக்கிய தேவைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். மீட்பு பணிகளுக்காக படகு மற்றும் சில பம்புகள் நாங்கள் வைத்திருக்கிறோம். சென்னை வாசிகளின் நம்பிக்கைக்கு எனது பாராட்டுக்கள். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் நிலவுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது..

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்று நம்புகிறேன், பாதிக்கப்பட்ட அனைவரும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.