close
Choose your channels

எனது கணவர் ஆத்மா சாந்தி அடையாது! சரவணபவன் ராஜகோபால் இறப்பு குறித்து ஜீவஜோதி

Saturday, July 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற நிலையில் சிறைக்கு செல்லும் முன்னரே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜகோபால், சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவர் தீர்ப்புக்கு பின் ஒருநாள் கூட சிறையில் தண்டனை அனுபவிக்கவில்லை

இந்த நிலையில் தனது கணவர் கொலை வழக்கின் தீர்ப்பு மற்றும் சரவணபவன் ராஜகோபால் இறப்பு ஆகியவை குறித்து கருத்து கூறிய ஜீவஜோதி, என்னுடைய நியாயமான போராட்டத்தால் உச்சநீதிமன்றம் ராஜகோபாலின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. அந்த நாளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உயிரிழந்தது ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும், ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் அவர் உயிரிழந்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இதனால் என் கணவர் ஆத்மா சாந்தியடையாது. எனக்கு இது ஆறாத வடுவாக உள்ளது" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.