'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஹாலிவுட் திரைப்படம் ‘தி டாவின்சி கோட். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்றாலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பும் இருந்தது என்பதும் ஒருசில நாடுகளில் இந்த படம் தடை செய்யப்பட்டது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘தி டாவின்ஸி கோட்’ போன்றது தனது அடுத்த படம் என பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமார் தெரிவித்துள்ளார். ’அட்டகத்தி’ ’பீட்சா’ ’சூதுகவ்வும்’ ’தெகிடி’ ’முண்டாசுபட்டி’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தவரும் ’மாயவன்’ மற்றும் ’கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவருமான சிவி குமார் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ‘தி டாவின்ஸி கோட்’ போல் ஒரு அட்வென்சர் திரைப்படம் என்றும் ராஜேஷ் இந்த படத்தின் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன் உள்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரகாஷ் ருத்ரா என்பவர் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அஸ்வின் படத்தொகுப்பு பணி செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தி டாவின்சி கோட்’ படத்தை பார்த்து அதன் பாதிப்பால் ஒரு கதையை எழுதி உள்ளதாகவும் வரலாற்றை மையமாக படுத்தியுள்ள இந்த கதையில் அறிவியல் அம்சமும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

சிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சிம்பு ஹீரோவாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' என்ற திரைப்படத்தின் நாயகி சார்மியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 

மீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது

நாங்க யார்கிட்டயும் தோக்க மாட்டோம்: 'களத்தில் சந்திப்போம்' டிரைலர்

ஜீவா மற்றும் அருள்நிதி முதல் முறையாக இணைந்து நடிக்கும் 'களத்தில் சந்திப்போம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே

இந்தியாவில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வழக்கு விசாரணை!!!

இந்தியாவில் முதல் முறையாக காணொலி மூலம் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரபப்பப் பட்டது.

திடீரென அரசியலில் குதித்த பிரபல நடிகை: தேடி வந்தது துணைத்தலைவர் பதவி!

பிரபல நடிகை ஒருவர் அரசியலில் இணைந்தவுடன் அவருக்கு கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவர் பதவி தேடி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது