சமூக விரோதிகள் விவகாரம்: ரஜினி மீது வழக்கு தொடர நாம் தமிழர் கட்சி முடிவு

  • IndiaGlitz, [Friday,June 01 2018]

தூத்துகுடி போராட்டம் கலவரமாக மாற சமூக விரோதிகளே காரணம் என்றும், போலீசை சமூக விரோதிகள் அடித்ததால் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலவரத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று கூறும் ரஜினிகாந்த், அந்த சமூக விரோதிகளை அடையாளம் காண்பிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடிகர் சரத்குமார் ஒரு படி மேலே போய் ரஜினி சமூக விரோதிகளை அடையாளம் காணாவிட்டால் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்படலாம் என்று கூறினார்.

இந்த நிலையில் சமூகவிரோதிகள் ஊடுருவல் பற்றி
முன்கூட்டியே தெரிந்தும் காவல்துறையிடம் தெரிவிக்காதது சட்டப்படி குற்றமாகும் என்றும் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையினர் இன்று பகல் 12:45 மணியளவில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு வழங்கவுள்ளவிருப்பதாகவும் 'நாம் தமிழர் கட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில் சற்றுமுன் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
 

More News

சரத்குமாரிடம் 'யார் நீங்க' என்று ஏன் கேட்கவில்லை: சந்தோஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்றிருந்தபோது சந்தோஷ் என்ற வாலிபர் அவரை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி எழுப்பினார்.

என் நோக்கத்தை மீடியா திரித்துவிட்டது: 'யார் நீங்க" கேள்வி கேட்ட சந்தோஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் எ

ரஜினிக்கு ஆதரவான கருத்தா? விஜய்சேதுபதி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

கார்த்தியின் 'தேவ்' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

அஜித், விஜய், விஜய்சேதுபதியை கலாய்க்கும் 'தமிழ்ப்படம்'

நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம்' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.0' திரைப்படம் தற்போது தயாராகி