close
Choose your channels

சமூக விரோதிகள் விவகாரம்: ரஜினி மீது வழக்கு தொடர நாம் தமிழர் கட்சி முடிவு

Friday, June 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடி போராட்டம் கலவரமாக மாற சமூக விரோதிகளே காரணம் என்றும், போலீசை சமூக விரோதிகள் அடித்ததால் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலவரத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று கூறும் ரஜினிகாந்த், அந்த சமூக விரோதிகளை அடையாளம் காண்பிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடிகர் சரத்குமார் ஒரு படி மேலே போய் ரஜினி சமூக விரோதிகளை அடையாளம் காணாவிட்டால் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்படலாம் என்று கூறினார்.

இந்த நிலையில் சமூகவிரோதிகள் ஊடுருவல் பற்றி
முன்கூட்டியே தெரிந்தும் காவல்துறையிடம் தெரிவிக்காதது சட்டப்படி குற்றமாகும் என்றும் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையினர் இன்று பகல் 12:45 மணியளவில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு வழங்கவுள்ளவிருப்பதாகவும் 'நாம் தமிழர் கட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில் சற்றுமுன் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.