சசிகலாவை சீமானும் சந்தித்தார்: அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதா?

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக முழு ஓய்வில் இருந்தார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அவர் தனது அரசியல் ஆட்டத்தை தொடங்குவார் என்று அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர்.

அந்த வகையில் இன்று அடுத்தடுத்து பிரபலங்கள் சசிகலாவை சந்தித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் சசிகலாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சந்தித்தார். அவரை தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா சசிகலாவை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்துள்ளார். ஏற்கனவே சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று சீமான் அறிவித்துள்ள நிலையில் தற்போது சசிகலாவை சந்தித்து இருப்பது பல்வேறு அரசியல் யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவின் அமமுக தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகுமா? அந்த கூட்டணியில் சரத்குமார், சீமான் கட்சிகள் உள்பட ஒரு சில கட்சிகள் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரபலங்களை அடுத்தடுத்து சந்தித்து வருவதை பார்க்கும்போது சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது.

More News

சரத்குமாரை அடுத்து சசிகலாவை சந்தித்த பழம்பெரும் இயக்குனர்!

நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சசிகலாவை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் முன்னணி வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய முன்னணி வீரராக இருந்து வரும் உபுல் தரங்கா

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரின் அசத்தல் சாதனை!

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான ஜி.சத்யன் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

சசிகலாவுடன் பிரபல நடிகர் சந்திப்பு: தேர்தல் கூட்டணியா?

சசிகலாவை பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சங்கீதா மகளா இவர்? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'பிதாமகன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சங்கீதா. அதன் பின்னர் 'உயிர்' என்ற திரைப்படத்தில்