நதியாவுடன் நடித்த சிறுவர்கள் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? வேற லெவல் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Friday,July 16 2021]

நடிகை நதியாவுடன் 36 வருடங்களுக்கு முன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு வேற லெவல் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 1985ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் மோகன்லால், நதியா, பத்மினி நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ’நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு’ இந்த திரைப்படம் பின்னர் தமிழில் ’பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நதியாவுடன் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். அவர்களில் சமீர் மற்றும் சாம் ஆகிய இருவரும் சமீபத்தில் நதியாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 36 வருடங்கள் கழித்து அவர்களை தான் மீண்டும் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்றும் நதியா அந்த புகைப்படத்தை பதிவு செய்து நதியா தெரிவித்துள்ளார்

இந்த புகைப்படம் ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பதிவு செய்துள்ள கமெண்ட்ஸ்தான் வேற லெவல் உள்ளது. 36 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களுடன் நதியா எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்பொழுது கூட நீங்க அவர்கள் இருவரையும் விட நீங்கள் தான் இளமையாக இருக்கிறீர்கள் என்று பதிவு செய்துள்ளனர். உண்மையில் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது நதியா, அந்த இருவரை விட இளமையான தோற்றத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

வலுவான தலைமுடி வேண்டுமா? நடிகை குஷ்பு சொன்ன டிப்ஸை try பண்ணுங்க…

தமிழ் சினிமாவில் 80-90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு இன்றைக்கும் பல யூத் நடிகைகளுக்கே

முதல் நாளே கமல்-விஜய்சேதுபதி மோதல்? 'விக்ரம்' படப்பிடிப்பு ஆரம்பம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தயாராக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்' என்றும் இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது

நாசர் மகன் நடிக்கும் திரைப்படம்: டைட்டிலை அறிவித்த கமல்ஹாசன்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த 'கடாரம் கொண்டான்' என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் என்பது தெரிந்ததே.

வரிக்காக அல்ல, மேல்முறையீடு செய்வது இதற்காகத்தான்: விஜய் வழக்கறிஞர்!

விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி அவருக்கு தனது கண்டனத்தையும்

நம்பவே முடியாத புது தொழில்நுட்பத்துடன் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? முன்பதிவு செய்வது எப்படி?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.