நாங்க செலவு செஞ்ச பணம் கூட சம்பளமா கிடைக்கல: நாடியா சாங் குடும்பத்தினர் அதிருப்தி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நாங்கள் செலவு செய்த பணம் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக கொடுக்கப்படும் சம்பளம் இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்ட நாடியாசாங் உறவினர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நாடியாசாங் முதல் வார நாமினேஷனிலேயே குறைவான வாக்குகள் பெற்றதை அடுத்து வெளியேற்றப்பட்டார். மலேசியாவில் இருந்து கடந்த சீசனில் கலந்துகொண்ட முகேன் டைட்டில் பட்டத்தை வென்றதை அடுத்து நாடியாசாங்கிற்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவரது குடும்பத்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் முதல் வாரமே அவரை வெளியேற்றி விட்டது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடியாசாங் அவர்களுக்கு குறைவான வாக்குகள் பெற்றதால்தான் வெளியேற்றப்பட்ட கூறியிருந்த நிலையில் மலேசியாவில் நாடியாசாங்கிற்கு அதிகமான ரசிகர்கள் உண்டு என்றும் ஆனால் மலேசியாவில் இருந்து நாடியாசாங் அவர்களுக்கு வாக்களிக்க முடியவில்லை என்றும் இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்து இருந்தால் கண்டிப்பாக நாடியாசாங் அதிகமாக வாக்குகள் பெற்று இருப்பார் என்றும் அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும் நாடியாசாங் மலேசியாவில் இருந்து சென்னை வருவதற்கு போக்குவரத்து செலவு மற்றும் தங்கும் செலவு ஆகியவை கூட அவர்கள் இரண்டு வாரத்திற்கு கொடுக்கும் சம்பளம் போதாது என்றும் இதனால் அதுமட்டுமின்றி கூடுதலாக ஒரு வாரங்கள் நாடியாசாங் இருந்திருந்தால் அவருக்கு பிரபலம் கிடைத்திருக்கும் என்றும் அவருடைய குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.

More News

திடீரென சோஷியல் மீடியா நிறுவனம் துவங்கும் டிரம்ப்… என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் “ட்ரூத்“

நீ போய்ட்டா எல்லாரும் அழுவாங்க: அபிஷேக்கை கலாய்த்த போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக்கை தற்போது சக போட்டியாளர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர் என தெரிகிறது. ஏற்கனவே பார்வையாளர்கள் அவரை பற்றி புரிந்து,

என்ன வேதனையோ? செல்போனை விழுங்கிவிட்டு 6 மாதமாக தவித்த இளைஞர்!

எகிப்து நாட்டில் செல்போனை விழுங்கிய இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் செல்போனை

ஷாருக்கான் மற்றும் பிரபல நடிகை வீட்டில் திடீர் சோதனை: பாலிவுட்டில் பரபரப்பு!

ஷாருக்கான் மற்றும் பாலிவுட்டின் பிரபல நடிகை ஒருவர் வீட்டில் திடீரென சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனதை கொள்ளை கொள்ளும் ரவீனாவின் புதிய போட்டோஷூட்!

ராட்சசன்; திரைப்படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த ரவீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருப்பதாக கமெண்ட்ஸ்கள்