சாமியார் ஆசாராம் பாபுவை அடுத்து அவரது மகனுக்கும் ஆயுள் தண்டனை!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மற்றும் மகன் நாராயணன் சாய் ஆகியோர்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சமீபத்தில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது

இந்த நிலையில் அவரது மகன் நாராயணன் சாய் மீதான வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டபோது அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டு குற்றவாளி என அறிவித்தது. மேலும் நாராயணன் சாய் தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாய்க்கும் ஆயுள்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது

பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை, மகன் என இரண்டு சாமியார்களுக்கும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

அதிரடி ஆட்டத்துடன் விடை பெற்ற வார்னர்: இனி என்ன ஆகும் சன்ரைசர்ஸ்?

நேற்று பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 56 பந்துகளில் 81 ரன்கள் அதிரடியாக அடித்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர்.

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியின் முதல் அதிரடி உத்தரவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே நிர்வாகிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் தமிழக அரசு நியமனம் செய்தது.

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் அதர்வா, ஜீவா படங்கள்

தமிழ் திரையுலகின் இரண்டு இளையதலைமுறை நடிகர்களான அதர்வா மற்றும் ஜீவா ஆகியோர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இரண்டு நடிகைகள் கைது!

நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில மாதங்களாக 'மீடூ'வின் மூலம் கூறி வருவதால் பல விஐபிக்களின் முகத்திரை கிழிந்து வருகிறது.

'ஐட்டம்' என்று கூறிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஓவியா

நடிகை ஓவியா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் பல கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார்.