close
Choose your channels

சாமியார் ஆசாராம் பாபுவை அடுத்து அவரது மகனுக்கும் ஆயுள் தண்டனை!

Tuesday, April 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு மற்றும் மகன் நாராயணன் சாய் ஆகியோர்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சமீபத்தில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது

இந்த நிலையில் அவரது மகன் நாராயணன் சாய் மீதான வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டபோது அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டு குற்றவாளி என அறிவித்தது. மேலும் நாராயணன் சாய் தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாய்க்கும் ஆயுள்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது

பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை, மகன் என இரண்டு சாமியார்களுக்கும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.