close
Choose your channels

டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்த நடராஜன்: மேலும் ஒரு தமிழக வீரரும் அறிமுகம்!

Friday, January 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று பிரிஸ்பேன் நகரில் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் இரண்டு தமிழக வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர் என்பது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்த தொடரில் அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகிறார். ஒரு சுற்றுப் பயணத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகை போட்டிகளிலும் நடராஜன் அறிமுகமாகியுள்ளார் என்பதும் பெருமைக்குரியது என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் அவரது பெயர் கொண்ட ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். டெஸ்ட் போட்டியில் இன்று அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக வீரரான அஸ்வின் தனது தொப்பியை வழங்கி கவுரவித்தார். அதேபோல் நடராஜனுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அவர்கள் தனது தொப்பியை வழங்கினார். இந்த இரண்டு நிகழ்வுகளின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் ஒரே நாளில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.