பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடராஜன்! வைரல் புகைப்படம்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பதும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் சர்வதேச அளவில் அறிமுகமாகி மூன்று வகை போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்தார் என்பதும் தெரிந்ததே
இதனை அடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய நடராஜனுக்கு அவரது சொந்த ஊரில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் அவருக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பழனி முருகன் கோவிலில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
இந்திய அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைத்தால் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து கொள்வதாக நேர்த்திக்கடன் நேர்ந்து இருந்ததாகவும், இதனையடுத்து தற்போது அந்த நேர்த்திக்கடனை நடராஜன் செலுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments