கார் பரிசளித்த தொழிலதிபருக்கு நடராஜன் கொடுத்த அன்புப்பரிசு!

சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய இளம் வீரர்கள் அபாரமாக விளையாடியதை அடுத்து 6 இந்திய வீரர்களுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் தார் காரை பரிசாக அளித்தார்

சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த அணியில் இளம் வீரர்கள் பலர் இருந்தனர் என்பதும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் சிறப்பாக செயல்பட்ட 6 இளம் வீரர்களான நடராஜன், ஷர்துல் தாக்கூர். நவ்தீப் சைனி. முகமது சிராஜ், சுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா தனது நிறுவனத்தின் ‘தார்’ கார்களை பரிசளிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

இதனையடுத்து நேற்று தார் காரை பரிசாகப் பெற்ற நடராஜன் அந்த காரை தனது இல்லத்திற்கு ஓட்டி வந்தார். இதனையடுத்து தார் காரை ஓட்டி மகிழ்ந்த நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ‘நான் இன்று நீங்கள் பரிசாக வழங்கிய மகேந்திரா தார் காரை வீட்டிற்கு ஓடி வந்தேன். உங்களது பாராட்டிற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கிரிக்கெட் மீதான உங்கள் அன்பை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் ‘கபா’ டெஸ்டில் நான் விளையாடிய ஜெர்சியை கையொப்பமிட்டு அன்பு பரிசாக அனுப்பி உள்ளேன் என்று கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

More News

ஒரே நாளில் விருதுகளை பெறும் ரஜினி-தனுஷ்: மத்திய அமைச்சர் தகவல்

தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்தும் தேசிய விருதை தனுஷும் ஒரே நாளில் பெற இருப்பதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார் 

ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' பட நாயகிக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக .

ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது....! சீமான் சரமாரி கேள்வி...!

கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர, ஸ்டாலினுக்கு வேறு தகுதியில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தில் இணைந்த யோகிபாபு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

இலவச சிலிண்டரில் பிரியாணி, இலவச கேபிளில் நாடகம்: நமீதா பிரச்சாரம்

அரசு தரும் இலவச சிலிண்டரில் பிரியாணி செய்து அரசு தரும் இலவச கேபிள் மூலம் தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கலாம் என நடிகை நமீதா தேர்தல் பிரசாரம் ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது