close
Choose your channels

கார் பரிசளித்த தொழிலதிபருக்கு நடராஜன் கொடுத்த அன்புப்பரிசு!

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய இளம் வீரர்கள் அபாரமாக விளையாடியதை அடுத்து 6 இந்திய வீரர்களுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் தார் காரை பரிசாக அளித்தார்

சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த அணியில் இளம் வீரர்கள் பலர் இருந்தனர் என்பதும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் சிறப்பாக செயல்பட்ட 6 இளம் வீரர்களான நடராஜன், ஷர்துல் தாக்கூர். நவ்தீப் சைனி. முகமது சிராஜ், சுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா தனது நிறுவனத்தின் ‘தார்’ கார்களை பரிசளிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

இதனையடுத்து நேற்று தார் காரை பரிசாகப் பெற்ற நடராஜன் அந்த காரை தனது இல்லத்திற்கு ஓட்டி வந்தார். இதனையடுத்து தார் காரை ஓட்டி மகிழ்ந்த நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ‘நான் இன்று நீங்கள் பரிசாக வழங்கிய மகேந்திரா தார் காரை வீட்டிற்கு ஓடி வந்தேன். உங்களது பாராட்டிற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கிரிக்கெட் மீதான உங்கள் அன்பை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் ‘கபா’ டெஸ்டில் நான் விளையாடிய ஜெர்சியை கையொப்பமிட்டு அன்பு பரிசாக அனுப்பி உள்ளேன் என்று கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.