உலகின் மிக உயரமான கட்டிடத்தில் 'நவரசா' விளம்பரம்!

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் மற்றும் 9 ஹீரோக்கள் நடிக்கும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் இன்று மதியம் 12.30 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து மிகப்பெரிய அளவில் இந்த ஆந்தாலஜி படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அவற்றில் ஒன்று துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபாவில் நேற்று இரவு முதல் ‘நவரசா’ படத்தின் விளம்பரம் மின்விளக்குகளால் ஒளிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்கள் வைரலாகி வருகிறது என்பதே இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்

‘நவரசா’ திரைப்படத்தில் ஒன்பது பகுதிகள் இருந்தாலும் அதில் சூர்யாவின் பகுதி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா மற்றும் பிரயாகா மார்டின் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள பகுதிக்கு ’கிட்டார் கம்பி மேல் நின்று’ என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. இசை பிரியரான சூர்யாவை ஒரு பெண் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறார் என்பதுதான் இந்த பகுதியின் கதை என்று கூறப்படுகிறது. அதேபோல் விஜய்சேதுபதி பகுதியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், பாபி சிம்ஹா, அதர்வா, பிரசன்னா, கெளதம் மேனன், யோகி பாபு, பார்வதி, அஞ்சலி, அதிதி பாலன், ரேவதி, ரித்விகா, ரம்யா நம்பீசன், டெல்லி கணேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நவரசா’வின் ஒன்பது பகுதிகளை பிரியதர்ஷன், வசந்த், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த ஆந்தாலஜி படத்தின் விமர்சனத்தை இன்னும் சிலமணி நேரங்களில் பார்ப்போம்.

More News

சிம்புவின் அடுத்த படத்திற்கு மகாகவி பாரதி பாடல் வரி டைட்டிலா?

பிரபல நடிகர் சிம்பு நடிக்கும் 47வது திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: இந்தியா அதிர்ச்சி தோல்வி

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டிகளில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் பிரிட்டன் அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது 

பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி விலகல்… திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டின் பிரபல கிளப் அணியான பார்சிலோனா அணியில் தனது 13 வயது முதல் விளையாடி வருகிறார்.

21 ஆண்டுகளுக்கு பின் மெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி!

21 ஆண்டுகளுக்குப் பின்னர் பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான மெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு காரணமாக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

வெறும் வாயால் கின்னஸ் சாதனை… நெட்டிசன்களையே அலற வைத்த இளம்பெண்!

நம்மூரில் “வெறும் வாயை மெல்லாதே“ என்று பொதுவாக ஒரு சொலவடை சொல்லப்படுவது உண்டு.