நயன்தாராவின் படத்திற்கு 'அறம்' டைட்டில் ஏன்?

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

இன்று பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ள நயன்தாரா நடிக்கும் 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு அவரது ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்.. இன்றைய சமூக வலைத்தளங்களில் நயன்தாரா தான் டிரெண்ட் என்ற அளவுக்கு இந்தபடம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் 'அறம்' படக்குழுவினர் இந்த படம் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அறம் செய்ய விரும்பு என்று அவ்வை பாட்டியின் சொல்லை நாம் சிறுவயதிலேயே படித்திருக்கின்றோம். அறம் என்றால் தர்மம், நெறி என்று பொருள். காசு, பணம், பெயர், புகழ் ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பல மடங்கு மகிழ்ச்சியும், நிம்மதியும், 'அறம்' செய்வதில் இருக்கின்றது என்ற உண்மையை புரிய வைக்கும் படம் தான் 'அறம்'
"உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் படம்தான் 'அறம்'. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாக கொண்டு நகரும் கதை என்பதால் இந்த படத்திற்கு 'அறம்' பொருத்தமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
'மாவட்ட ஆட்சியர்' என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா அவர்கள் வழங்கி இருப்பதாகவும் அறம் படத்தின் முதல் போஸ்டரை, அவர்களின் பிறந்த நாளன்று வெளியிட்டிருப்பது குறித்து பெருமைப்படுவதாகவும் இயக்குனர் கோபி நயனார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கே ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்திருப்பதை பார்க்கும்போது கண்டிப்பாக படத்திற்கு இதைவிட பலமடங்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More News

இன்று நயன் தாராவுக்கு ஸ்பெஷல் பிறந்த நாள். எப்படி தெரியுமா?

ஒரு மாஸ் நடிகரின் பிறந்த நாளில் அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து அசத்துவார்கள்....

ஆஸ்கருக்கு வெகு அருகில் 'விசாரணை'

சிறைகளிலும் காவல்துறை விசாரணைகளிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டிய விசாரணை திரைப்படம்...

ஜி.வி.பிரகாஷின் 'கிக்'ஐ பாராட்டிய இளையதளபதி

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் படத்தில் நயன்தாரா

இன்று நயன்தாராவின் பிறந்த நாளை அடுத்து அவர் கலெக்டராக நடித்து வந்த 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளிவந்தது...

கோடிட்ட இடங்களை நிரப்புவது காதலா? வாழ்க்கையா? பார்த்திபன்

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் வெற்றியை அடுத்து பார்த்திபன் இயக்கவுள்ள படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. பார்த்திபனின் குருநாதர் கே.பாக்யராஜின்...