close
Choose your channels

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஃபாலோ விவகாரம்.. . விவாகரத்து வரைக்கும் போயிருச்சே..!

Sunday, March 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை அடுத்து அவர் தனது கணவரை அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும் விரைவில் பிரிய போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களையும், குழந்தைகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், அவர் விக்னேஷ் சிவனை அன்பாஃலோ செய்துவிட்டதாகவும் இருவருக்கும் இடையே பிரச்சனை என்றும் கூடிய சீக்கிரம் விவாகரத்து செய்ய போவதாகவும் வதந்திகளை கிளப்பிவிட்டனர்.

இது குறித்து நயன்தாரா தரப்பினர் கூறிய போது ’இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட ஒரு சின்ன டெக்னிக்கல் ஃபால்ட் காரணமாக தான் சிலருடைய ஃபாலோயர்கள் பெயர் காண்பிக்கப்படவில்லை என்றும் தற்போது மீண்டும் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து ஒரு சின்ன டெக்னிக்கல் ஃபால்ட்டால் உடனே விவாகரத்து வரை சென்று விட்டார்களே என்று நயன்தாரா தரப்பினர் புலம்பி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.