சரவணா ஸ்டோர் ஓனருடன் நயன்தாரா நடிப்பது உண்மையா?

  • IndiaGlitz, [Monday,April 17 2017]

கடந்த இரண்டு நாட்களாக மிமி கிரியேட்டர்களுக்கு கிடைத்த அல்வா போன்ற விஷயம் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளதாக வந்த செய்திதான். ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூகவலைத்தளங்கள், இணையதளங்களும் இந்த செய்தியை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணா ஸ்டோர் சரவணன் ஏற்கனவே ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயாவுடன் தனது கடையின் விளம்பரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சூர்யா, ஜோதிகா,சமந்தா உள்பட கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர், நடிகையர் இவருடைய கடை விளம்பரத்தில் நடித்துவிட்டனர். சமீபத்தில் கூட புதிய கடை திறப்புவிழாவிற்கு வைரமுத்து, ஜெயம் ரவி, மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். எனவே திரைத்துறைக்குக்கும் சரவணன் அவர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் திருச்செந்தூரில் ரூ.1 கோடி தங்கவேல் காணிக்கையாக கொடுத்த சரவணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது திரைப்படங்கள் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும், தனது முதல் படத்தில் நயன்தாராவை நாயகியாக நடிக்கவைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார்.

இந்த செய்தி ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி நயன்தாரா, சரவணன் படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால் இன்றுவரை நயன்தாரா, சரவணன் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை என்பதே உண்மை.

More News

இரட்டை இலை லஞ்ச விவகாரத்தில் தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெறுவதற்காக அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் ரூ.60 கோடி வரை பேரம் பேசியதாகவும், அதற்கு அட்வான்ஸாக ரூ.1.30 கோடி வரை பெற்றதாகவும் டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவர் இன்று காலை செய்யப்பட்டார்...

சரத்குமாரின் 'இரண்டாவது ஆட்டம்' ஆரம்பம்

பிரபல நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், கடந்த 2015ஆம் ஆண்டு நடித்த 'சண்டமாருதம்' படத்திற்கு பின்னர் தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை...

டெல்லியில் கைதான சுகேஷ் சந்திரா யார் என்றே எனக்கு தெரியாது! டிடிவி தினகரன்

ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான 'இரட்டை இலை'யை கைப்பற்றும் அணியே உண்மையான அதிமுக என பொதுமக்கள் கருதுவார்கள் என்பதால் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் அந்த சின்னத்தை பெற கடுமையாக போராடி வருகின்றன...

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி பேரமா? டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளந்தது. இதன் காரணமாக அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது...

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் ஃபாஸ்ட் வசூல் நிலவரம்

கடந்த சில வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த ஃ'பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் ஏழு பாகங்களும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் நல்ல வசூலை வாரி குவித்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இந்த படத்தின் எட்டாம் பாகம் வெளியானது...