பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே.. நயன்தாராவை வர்ணித்தவர் யார் தெரியுமா?

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வர்ணித்த சமூக வலைதள பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி சென்னை அருகே மகாபலிபுரத்தில் தனது நீண்டநாள் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. ஆனால் அவரது திருமணம் கடந்த 2016 ஆம் ஆண்டே ரிஜிஸ்டர் செய்யப்பட்டதாக சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் அவர் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்று உள்ளார் என்பதும் இதுகுறித்த சர்ச்சைகளும் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கைக்கு பின் முடிவுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வர்ணித்து கவிதைகளை எழுதி வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வெளியிட்டு ’பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் கூட பளபளக்கும் பந்தூரமே’ என வர்ணித்துள்ளார்.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் பளபளக்கும் பந்தூரமே’ என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பதிவு செய்த நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்: ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியர் இவர்தான்.. நிம்மதி அடைந்த பெண் போட்டியாளர்கள்!

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன சிம்பு, தனுஷ் படங்கள்: டிசம்பரில் வெளியாகும் ஜெயம் ரவி படம்!

டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த தனுஷ் மற்றும் சிம்பு படங்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் டிசம்பரில் ஜெயம் ரவியின் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

2.5 ஏக்கர், ரூ.3.5 கோடி சென்னையில் தயாராகும் லண்டன் ஜெயில் செட்: எந்த படத்திற்கு தெரியுமா?

 பிரபல இயக்குனர் ஒருவரின் படத்திற்காக லண்டன் சிறை போன்ற செட் 2.5 ஏக்கரில் ரூ.3.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

'கபாலி' கேரக்டரில் கிறிஸ் கெய்ல் நடிக்கும் தமிழ்ப்படம்: டைட்டில் அறிவிப்பு!

 தமிழ் திரையுலகில் ஏற்கனவே மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் பிராவோ உள்பட ஒருசில கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மற்றொரு மேற்கிந்திய கிரிக்கெட் அதிரடி வீரரான கிறிஸ்