close
Choose your channels

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே.. நயன்தாராவை வர்ணித்தவர் யார் தெரியுமா?

Sunday, October 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வர்ணித்த சமூக வலைதள பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி சென்னை அருகே மகாபலிபுரத்தில் தனது நீண்டநாள் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. ஆனால் அவரது திருமணம் கடந்த 2016 ஆம் ஆண்டே ரிஜிஸ்டர் செய்யப்பட்டதாக சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் அவர் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்று உள்ளார் என்பதும் இதுகுறித்த சர்ச்சைகளும் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கைக்கு பின் முடிவுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வர்ணித்து கவிதைகளை எழுதி வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வெளியிட்டு ’பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் கூட பளபளக்கும் பந்தூரமே’ என வர்ணித்துள்ளார்.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் பளபளக்கும் பந்தூரமே’ என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பதிவு செய்த நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.