நயன்தாரா பிறந்தநாளில் சிங்கப்பூர் ரசிகர் செய்த அர்ச்சனை

  • IndiaGlitz, [Wednesday,November 20 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர் என்பதும் அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து சிங்கப்பூர் ரசிகர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள விநாயகர் கோவிலில் நயன்தாரா பெயரில் தேங்காய் அர்ச்சனை செய்து உள்ளார். மேலும் அவர் அர்ச்சனை செய்துள்ள ரசிதின் புகைப்படத்தை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நயன்தாரா குரியன் என்ற பெயருடன் அவரது நட்சத்திரம் அந்த ரசீதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.

நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகிவரும் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் அவர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து இயக்கும் ’மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்திலும் டைட்டில் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

தெலுங்கு சினிமா எனக்கு இன்னொரு வீடு: ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் லாபம்

ரசிகர்களுக்கு படிப்படியாக இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்-ரஜினி!

சமூக வலைதளங்களில் தற்போது அஜீத், விஜய் ரசிகர்கள் எவ்வாறு மோதிக் கொள்கின்றார்களோ அதேபோல் பல ஆண்டுகளாக கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதிக் கொண்டிருந்தார்கள்

நடுரோட்டில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியா?

கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகரின் மனைவி

மைக்ரோசாஃப்ட் தலைவரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான பில் கேட்ஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

கமலுடன் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு வலுவான திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து இரண்டு திரையுலக ஜாம்பவான்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் எதிர்த்து போட்டியிடவுள்ளனர்.