close
Choose your channels

4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

Sunday, May 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பமான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தற்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னையில் 4 மண்டலங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இம்மண்டலத்தில் 1889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தை அடுத்து கோடம்பாக்கத்தில் 1391, பேர்களும், திருவிக நகரில் 1133 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1054 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு மண்டலங்களில் மட்டும் மொத்தம் ஆயிரத்து 5467 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை, ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை, சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை போன்ற மற்ற பகுதிகளில் உள்ள தளர்வுகள் சென்னையில் இல்லை என்றாலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு திகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொதுமக்கள் மிக நெருக்கமான பகுதிகளில் வாழ்வதாலும், சென்னை மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் பலர் மாஸ்க் அணியாமல் இன்னும் சாலைகளில் சென்று கொண்டிருப்பதுமே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos