நீட்தேர்வு முடிவு… தேர்ச்சி பட்டியலில் குளறுபடியா???

  • IndiaGlitz, [Saturday,October 17 2020]

 

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு (நீட் தேர்வு) தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் கொரோனாவுக்கு நடுவிலும் நீட் தேர்வு இந்தியா முழுவதும் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. மேலும் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட்டு அத்தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான தேர்ச்சி முடிவுகள் நேற்று மாலை வெளியானதை அடுத்து அந்தப் பட்டியலில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

அந்தப் பட்டியலில் தெலுங்கானாவில் 50,392 பேர் நீட் தேர்வினை எழுதி உள்ளனர் எனக் கூறப்பட்டு இருக்கிறது. அதில் 1,738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் அதன் தேர்ச்சி சதவீதம் 49.15% எனத் தவறாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல திரிபுரா மாநிலத்தில் 3,546 பேர் மட்டுமே தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பட்டியலில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவல் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 37,301 பேர் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல உத்திரப்பிரதேசத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,323 பேர் தேர்ச்சி என்றும் தேர்ச்சி விகிதம் 60.79% என்றும் தவறான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. இந்தத் தவறுகள் ப்ரிண்டிங் செய்யும்போது ஏற்பட்ட குளறுபடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சரியான மறு அறிக்கையை வெளியிட தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்து வருவதாகக் தகவல்கள் கூறப்படுகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு 99,610 பேர் தேர்வு எழுதிய நிலையில் 57.44% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதனால் தமிழகம் இந்திய அளவில் 15 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. கடந்த ஆண்டு 1,23,78 பேர் தேர்வு எழுதி அதில் 48.57% தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டு 23 ஆவது இடத்தைப் பிடித்த தமிழகம் தற்போது 15 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

More News

இமயமலையில் பைக் ரைடு: 'மாஸ்டர்' நாயகியின் மலரும் நினைவுகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் அதன்பின்னர், விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் நாயகியாக நடித்துள்ள நிலையில்

ரூ.6.5 லட்சம் கட்டுனத்துக்கு அவ்ளோ புலம்பணுமா? ரஜினிக்கு பிரபல பாடகி கேள்வி

சமீபத்தில் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.5 லட்சம் ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்த் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

தலைத் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆசிரியர்… உலகம் முழுவதும் விஷ்வரூபம் எடுக்கும் சர்ச்சை!!!

பிரான்ஸ் நாட்டில் தலைநகரான பாரீஸின் புறநகர் பகுதியில் நேற்று மாலை ஒரு ஆசிரியர் தலைத் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

'காந்தி' படத்தை ரசித்த மக்கள் தான் ஹிட்லர் படத்தையும் ரசித்தார்கள்: '800' படம் குறித்து சரத்குமார்

விஜய்சேதுபதி நடிக்கவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்திற்கு திரையுலகினர், அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,