close
Choose your channels

உன் தங்கச்சிய தூக்கிட்டு போவோன்: சவால் விட்ட இளைஞரின் துண்டான தலை!

Thursday, November 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நெல்லையில் 19 வயது வான்மதி என்ற பெண்ணை, நம்பிராஜன் என்ற 23 வயது வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வான்மதியின் சகோதரர் மற்றும் அவருடைய நண்பர்கள் நம்பிராஜனை வெட்டிக் கொலை செய்துவிட்டு பிணத்தை தண்டவாளத்தில் தூக்கி போட்டு விட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கொலைகாரர்களை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் வாக்குமூலம் வாங்கினர். வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நம்பிராஜன் மீதும் அவருடைய குடும்பத்தின் மீதும் ஏற்கனவே அதிக வழக்குகள் உள்ளது. அவர்கள் குடும்பத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் நீண்ட நாள் பகை. இந்த நிலையில் என் தங்கை வான்மதி பின்னால் நம்பிராஜன் சுற்றி வந்ததால் நான் எனது நண்பர்களை அழைத்துச் சென்று அவனை எச்சரித்ததேன். ஆனால் அவனோ ’உன் தங்கச்சியை தூக்கிட்டு போய் கல்யாணம் செய்து காட்டுகிறேன்’ என்று சவால் விட்டான். அப்படி நடந்தால் உன் தலையை எடுத்துவிடுவேன்’ என்று நானும் அவனை எச்சரித்தேன்

எனது தங்கையிடமும் அந்த நம்பிராஜன் உடன் காதல் வேண்டாம், இந்த திருமணம் நடக்காது என்றும், உன் மனதை மாற்றிக் கொள் என்றும் அறிவுறுத்தினே. ஆனால் திடீரென நம்பிராஜன் சவால் விட்டபடியே எனது தங்கையை அழைத்துக்கொண்டு போய் திருமணம் செய்து விட்டான்.

இதனால் ஆத்திரமடைந்து என் நண்பர்களுடன் சேர்ந்து நம்பிராஜன் கொலை செய்துவிட்டு, பிணத்தை ரயில் தண்டவாளத்தில் தூக்கி போட்டு விட்டேன்’ என்று செல்லச்சாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட செல்லச்சாமி உள்பட 5 பேர்களையும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.