close
Choose your channels

ஷாப்பிங் அழைத்து செல்ல மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி

Thursday, November 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அடிக்கடி ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் காதலி வலியுறுத்திய நிலையில் அதற்கு மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் ஒன்று ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரிக் என்பவர் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அவ்வப்போது சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அடிக்கடி தன்னிடம் பேச வேண்டும் என்றும், ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், தான் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் காதலி முரண்டு பிடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தப் பெண் தனக்கு ஒத்து வர மாட்டார் என்று அந்த பெண்ணிடம் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டார் பாரிக்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஒரு நாள் சலூன் கடைக்கு நேரில் வந்து பாரிக்கிடம் பேசவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அந்தப் பெண், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து பாரிக் மீது வீசினார். இதனால் முகம், மார்பு பகுதிகளில் படுகாயமடைந்த பாரிக்கை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிட் வீசிய பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.