close
Choose your channels

தாண்டவமாடும் கொரோனா...! மஹாராஷ்டிராவில் வரும் புதிய கட்டுப்பாடுகள்...!

Thursday, April 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.

இந்தியாவிலே மஹாரஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏற்கனவே பலவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. இவை வரும் மே-1 வரை கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

• புறநகர் ரயில் சேவைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாட்டால் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அனுமதி தரப்படும்.

• அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை 50% இருந்து, 15%-மாக குறைக்கப்படும்.

• அத்தியாவசிய தேவைகளுக்காக செயல்படுபவை, செல்லப் பிராணிகள் கடை, தகவல் சேவை மையங்கள், கார்கோ அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்கப்படும். மேலும் வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள், வழக்கறிஞர்கள் அலுவலகங்கள் போன்றவற்றில் 5 நபர்கள் அல்லது 15% ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

• தனியார் மற்றும் அரசு போக்குவரத்து சேவைகள் 50% பயணிகளுடன் இயங்க, அனுமதி அளிக்கப்படும்.

• பிற நகரங்களுக்கு செல்பவர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு சென்றால் மட்டுமே அனுமதி தரப்படும். அவசர மருத்துவ சேவைகள் மற்றும் இறுதிச்சடங்கில் பங்குகொள்ள அனுமதி அளிக்கப்படும்.

• பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இருந்து ரயில், தனியார் பேருந்துகளில் வருபவர்கள், 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் 50% மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்படும்.இது போன்ற விதிகளை மீறும் நபர்கள் ரூ.10,000 அபராத தொகையை செலுத்த வேண்டும்.

• திருமண நிகழ்வுகளில் 25 பேர் கலந்து கொள்ளலாம், 2 மணி நேரம் மட்டுமே நடத்தப்பட வேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் ரூ.50,000 வரை அபராதத் தொகையை செலுத்த நேரிடும். மேற்கூறிய கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை பரிசோதிக்க, உள்ளாட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos