close
Choose your channels

எனக்கு இப்போதுதான் காதல் வந்துள்ளது: நித்யாமேனன்

Thursday, November 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா மீது தனக்கு இப்போதுதான் காதல் வந்துள்ளதாகவும், பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் காதல் தாமதமாக வருவது போல் தனக்கு சினிமாவின் மீது தாமதமாகவே காதல் வந்துள்ளதாகவும் நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இன்று கலந்துகொண்ட நடிகை நித்யா மேனன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது சினிமா அனுபவம் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்த போது ’ஆரம்பத்தில் தனக்கு சினிமாவின்மீது அதிக விருப்பம் இல்லை என்றும், காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பது தான் தனது ஆசையாக இருந்தது என்றும், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் நடிகை ஆகி விட்டதாகவும் தெரிவித்தார்

காதல் திருமணத்தில் கணவன் மனைவியிடையே உடனடியாக அந்நோன்யம் வந்துவிடும் என்றும் ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் நாள் ஆக ஆகத்தான் காதல் ஆழமாக இருக்கும் என்றும், அதேபோல் எனக்கு சினிமா மீது நாள் ஆக ஆக காதல் ஏற்பட்டதாகவும் தற்போது சினிமா மீது தனக்கு முழு காதல் வந்துள்ளதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது தெரிவித்தார்

மேலும் இயக்குனர்கள் தன்னை அதிகமாக வேலை வாங்கத் தேவையில்லை என்றும், ஒரு சீனை படித்துக் காட்டினால் அதை நான் புரிந்து கொண்டு நானாகவே நடித்து விடுவேன் என்றும், அந்த அளவுக்கு தான் இப்போது தேறி விட்டதாகவும் நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.