close
Choose your channels

எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை: 'திருச்சிற்றம்பலம்' படம் குறித்து நித்யாமேனன்!

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், இந்தப் படம் ரூ 50 கோடியை தாண்டி வசூல் செய்து இரண்டாவது வாரமாக வெற்றிநடை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற ’தாய்க்கிழவி’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலில் தனுஷ், நித்யா மேனன் ப்ரியா பவானிசங்கர் ஆகியோர்களின் செம ஆட்டம் ரசிகர்களை ரசிக்க வைத்தது என்றும் தெரிந்தது. மேலும் திரையரங்குகளில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து ஸ்க்ரீன் அருகே சென்று ஆடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து நித்யா மேனனை ரசிகர்கள் செல்லமாக ’தாய்க்கிழவி’ என்றே அழைக்க ஆரம்பித்தனர். சமூக வலைதளங்களில் தாய்க்கிழவி நித்யா மேனன் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் நித்யாமேனன், ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘தயவுசெய்து என்னை யாரும் ’தாய்க்கிழவி’ என்று அழைக்க வேண்டாம் என்றும் அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எனக்கு டான்ஸ் ஆட அவ்வளவாக விருப்பம் இருக்காது என்றும் அப்படியே டான்ஸ் ஆடினாலும் கமர்சியலாக நான் பண்ண மாட்டேன் என்றும் ஆனால் இந்த படத்தில் தனுஷ் எனக்கு டான்ஸ் ஆட ஊக்கம் கொடுத்தார் என்றும் அவருக்கு எனது நன்றிகள் என்றும் நித்யாமேனன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.