close
Choose your channels

'திருச்சிற்றம்பலம்' ஷோபனாவை விட சூப்பரா இருக்கும்: அடுத்த பட கேரக்டர் குறித்து நித்யா மேனன்..!

Wednesday, October 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நித்யா மேனன் தனது அடுத்த படத்தின் கேரக்டர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’திருச்சிற்றம்பலம்’ ஷோபனாவை விட இந்த கேரக்டர் சூப்பராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த படத்தின் நாயகியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் தனது கேரக்டர் குறித்து நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

இது ஒரு ரொமான்ஸ் மற்றும் காமெடி திரைப்படம் என்றும் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மிகச்சிறந்த விருந்தாக இருக்கும் என்று தெரிவித்தார். ’திருச்சிற்றம்பலம்’ ஷோபனா போல் ஒரு கேரக்டரில் நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த படத்தில் கிட்டத்தட்ட அதே கேரக்டர் இல்லை என்றாலும் அது போன்ற ஒரு கேரக்டர் தான் தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு கிராமத்து ரொமான்ஸ் காமெடி படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் முறையாக ஜெயம் ரவி ஜோடியாக நித்யா மேனன் நடிகை இருப்பதை அடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளார் என்பதும், ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.