மாட்டுச் சாணத்தில் பெயிண்ட்… அசத்தும் இந்தியக் கண்டுபிடிப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,December 19 2020]

 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் மாட்டு சாணத்தால் தயாரிக்கப்படும் பெயிண்ட் சந்தைக்கு வர உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டிவிட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட வேதிக் பெயிண்ட் அறிமுக்கப்படுத்தப் பட்டு உள்ளது” எனத் தெரிவித்து உள்ளார்.

பொதுவாக மாட்டுச் சாணம் கிருமி நாசினியாகவும், உரமாகவும் பயன்படுகிறது. அதேபோல சமையல் எரிவாயு பொருட்களைத் தயாரிக்கவும் மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மாட்டுச் சாணத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் இருக்கிறது என அறிவியல் ஆராய்ச்சியே ஒப்புக்கொண்டு உள்ளதாகப் பலரும் கூறிவருகின்றனர்.

இதனால் மாட்டுச் சாணம் மற்றும் அதன் சிறுநீரை சந்தைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு துவங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட பெயிண்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் சுற்றுச்சூலுக்கு பயன் அளிக்கும் வகையில் மாட்டுச் சாணத்தில் இருந்து பல பொருட்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் கோமியத்தை உட்கொண்டால் நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம் எனச் சிலர் கூறிவந்தனர். இது அறிவியல் முறையில் நிரூபிக்கப்படாதது எனப் பலரும விமர்சனம் வைத்த நிலையிலும் சில வடமாநிலங்களில் மாட்டு கோமியம் நல்ல விலைக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அடுத்ததாக மாட்டு கோமியத்தில் இருந்தே சானிடைசர் ஏன் மாஸ்க் கூட உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கிருமிநாசினியாக இருக்கும் மாட்டுச் சாணத்தை வைத்து பெயிண்ட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

More News

மாடு திருடியதாக இஸ்லாமியர் ஒருவர் படுகொலை… இளைஞர் கும்பலின் வெறிச்செயல்!!!

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல படுகொலைகள் நடந்தேறின.

10 மாதங்களில் 1 கோடியைத் தாண்டி… உலகிற்கு இந்தியா கொடுத்த படு ஷாக்!!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏற்பட்ட முதல் பாதிப்பு தற்போது 1 கோடியை தாண்டி இருக்கிறது

விவாகரத்து, பிரேக் அப் குறித்து வனிதா மாதிரியே யோசிக்கும் அவரது மகள்!

காதல், திருமணம், விவாகரத்து, பிரேக் அப் என மாறி மாறி வனிதாவின் வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கும் நிலையில் வனிதாவின் மகள் விவாகரத்து மற்றும் பிரேக் அப் குறித்து பதிவு செய்த இன்ஸ்டாகிராம்

திடீர் திருப்பம்: கைமாறுகிறதா டார்ச்லைட் சின்னம்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் டார்ச்லைட் சின்னம் கேட்டிருந்த நிலையில் டார்ச்லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு

கங்காருவை வீட்டில் வைத்து வளர்க்க முடியுமா? ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புதுத் தகவல்!!!

வீட்டு விலங்குகளாக ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, கோழி போன்ற விலங்குகளை மட்டுமே வளர்க்கிறோம்.