close
Choose your channels

விவாகரத்து, பிரேக் அப் குறித்து வனிதா மாதிரியே யோசிக்கும் அவரது மகள்!

Saturday, December 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதல், திருமணம், விவாகரத்து, பிரேக் அப் என மாறி மாறி வனிதாவின் வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கும் நிலையில் வனிதாவின் மகள் விவாகரத்து மற்றும் பிரேக் அப் குறித்து பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை வனிதா காதலித்ததாகவும் இருவரும் இணைந்து வாழ்ந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் திடீரென இருவருக்கும் பிரேக் அப் ஆனது. இதனை அடுத்து மீண்டும் பீட்டர் பாலுடன் வனிதா வாழ விரும்பியதாகவும் ஆனால் அதற்கு பீட்டர்பால் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் வதந்தி கிளம்பியது

இந்த வதந்திகளுக்கு சமீபத்தில் வனிதா விளக்கமளித்தார் என்பதும் தான் இதுவரை யாராலும் நிராகரிக்கபடவில்லை என்றும் நான்தான் எல்லாரையும் நிராகரித்து உள்ளேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் பீட்டர் பாலுடன் இனி வாழ முடியாது என்பதை முடிவு செய்த பின்னர் தான் இருவரும் பேசி பிரிந்தோம் என்றும் அவர் முதிர்ச்சி அடைந்தவர் என்பதால் அந்த முடிவை ஏற்று கொண்டார் என்றும் கூறியிருந்தார்

மேலும் வனிதா தனது இன்ஸ்டாகிராமில் ‘மீண்டும் காதல், இப்போது திருப்தியா’ என்று பதிவு செய்து அதனை நடிகை உமா ரியாஸ்க்கு டேக் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் வனிதாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விவாகரத்து பிரேக்கப் குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் ’விவாகரத்து பரவாயில்லை, பிரேக் அப் பரவாயில்லை அதிலிருந்து கடந்து வருவதும் ஓகே தான்.ஆனால் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்

விவாகரத்து, பிரேக்கப் குறித்து வனிதா போன்றே அவருடைய மகளும் முதிர்ச்சியாக யோசித்து உள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.