ஊரடங்கு முடியும் வரை மின் கட்டணம் வசூலிக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் மின்சார கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதிரடியாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவில் ‘தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் வசூலிக்க தமிழக மின்சார வாரியத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை அதாவது மே 18ஆம் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை என்றும், மே 18 வரை மின்கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்கக் கூடாது' என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு மாதங்கள் வீட்டு வாடகை வசூல் செய்யக்கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் வீட்டு வாடகையை வசூல் செய்து கொண்டுதான் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டணம் வசூலிக்க தடை என்ற அறிவிப்பு தமிழக மக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

More News

சென்னை 'குடி' மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்: தமிழக அரசு அதிரடி

மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு ஒரு சில தளர்வுகளை அறிவித்த நிலையில் அந்த தளர்வுகளில் முக்கியமானதாக மதுபான கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்திருந்தது

பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி??? இன்ஸ்டாகிராமில் குரூப் சேட் செய்த பள்ளி மாணவர்கள்!!!

டெல்லியில் முக்கிய பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 வகுப்பு  பள்ளி மாணவர்கள் செய்த காரியம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

தமிழக முதல்வருக்கு P.T.செல்வகுமாரின் முக்கிய வேண்டுகோள்!

தமிழக அரசு வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்திருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

வரலாறு காணாத அளவிற்கு கடன்வாங்கும் அமெரிக்கா!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அந்நாட்டை நிலைக்குலைய செய்திருக்கிறது.

அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குகிறது: கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு கட்ட ஊரடங்கை கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றி கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.