close
Choose your channels

ஸ்டெர்லைட்டுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: தமிழிசை

Thursday, May 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் காரணமாக மூன்றாவது நாளாக இன்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற அரசியல் தலைவர்கள் தூத்துகுடிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தூத்துகுடி சம்பவம் குறித்து பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஸ்டெர்லைட்டுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்றும், தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்ததற்கு அரசியல்வாதிகளே காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டும் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டுபவர்களை கண்டறிந்து ஒடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

மேலும் மு.க.ஸ்டாலின், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சனைகளை தூண்டிவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்ட தமிழிசை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஆர்எஸ்எஸ் காரணம் எனா உளறும் ராகுல் காந்தியைக் கண்டிப்பதாககவும், ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.