மிருணாள் தாக்கூரும் இல்லை, பாலிவுட் நடிகையும் இல்லை: 'எஸ்.கே.23' நாயகி இவர்தான்..!

  • IndiaGlitz, [Wednesday,February 14 2024]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 23 வது திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி உள்பட நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நாயகியாக நடிக்க ’சீதாராமம்’ நடிகை மிருணாள் தாக்கூர் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மேலும் சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி ருக்மணி வசந்த் என்று தெரிய வந்துள்ளது.

இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதை அடுத்து இந்த படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ’எஸ்கே 23’ படத்தின் நாயகி மிருணாள் தாக்கூர் இல்லை, பாலிவுட் நடிகையும் இல்லை, ருக்மணி வசந்த் தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை ருக்மணி வசந்த் ஏற்கனவே சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் 51 வது படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் ’எஸ்கே 23’ அவரது இரண்டாவது படம் தமிழ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சாய்பல்லவிக்கு காதலர் தின வாழ்த்து சொன்ன விவாகரத்து பெற்ற நடிகர் .. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

நடிகை சாய் பல்லவிக்கு  விவாகரத்து பெற்ற நடிகர் ரொமான்ஸுடன் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாக்யராஜின் சர்ச்சை பேச்சு.. தமிழக அரசின் உண்மை அறியும் பிரிவு விளக்கம்..!

இயக்குனர் பாக்யராஜ் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறிய நிலையில் அந்த கருத்துக்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

கடன் தொல்லை தீர கணபதி மந்திரம்!

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட கணபதியை வழிபடுவதும், கீழ்கண்ட மந்திரத்தை சொல்வதும் நன்மை தரும்.

சூரியுடனான பிரச்சனை என்ன ஆச்சு? மனம் திறந்த விஷ்ணு விஷால்..!

 நடிகர் சூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஷ்ணு விஷாலின் தந்தை நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு

நாளை அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சூப்பர் அறிவிப்பு வரப்போகுது..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு நாளை காலை 9.09 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.