close
Choose your channels

'ஜெயிலர்' படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவும் நடிக்க இருந்தாரா? நெல்சன் கூறிய தகவல்..!

Saturday, August 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூலிலும் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா ஒரு சிறப்பு தோற்றத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருந்ததாகவும் ஆனால் அதை எங்களால் செயல்படுத்த முடியவில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

’ஜெயிலர்’ திரைப்படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா அவர்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கும் ஒரு திட்டம் இருந்தது. ஆனால் அவருக்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்டில் அவரது மாஸ்-க்கு தேவையான அளவு ஸ்கிரிப்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அவரிடம் அணுகவில்லை. ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் அவரை கண்டிப்பாக பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

ரஜினி படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா ஒரு மாஸ் காட்சியில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்று ரஜினி ரசிகர்கள் இந்த பேட்டிக்கு கருத்து கூறியிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.