close
Choose your channels

தனுஷின் 'வாத்தி' படம் பார்த்த என்.டி.ஆர் பாலகிருஷ்ணா.. என்ன சொன்னார் தெரியுமா?

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் உருவான ‘வாத்தி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஒரு சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை எட்டியது என்பதையும் பார்த்தோம். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், திரையுலக பிரமுகர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வாத்தி’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜா தனுஷ் மற்றும் ‘வாத்தி’ குழுவினர்களுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா தனுஷ், வெங்கி அட்லுரி உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘வாத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை பார்க்க வந்தது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை என்றும் அவர் இந்த படத்தை பார்த்து கூறிய பாசிட்டிவ் வார்த்தைகள் எங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது என்றும் அவருக்கு எங்களது நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளது.

நடிகர் தனுசுக்கு தமிழ் திரையுலகினர் மட்டும் இன்றி தெலுங்கு திரை உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos