'தளபதி 61' படக்குழுவினர்களின் அன்பு வேண்டுகோள்

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'விஜய் 61' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் 'மூன்று முகம்' என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்திகளில் பெரும்பாலானவை படக்குழுவினர்களால் ஊர்ஜிதம் செய்யப்படாதவை. எனவே 'தளபதி 61' படக்குழுவினர் ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இதுகுறித்த பத்திரிகை செய்திக்குறிப்பில் படக்குழுவினர் கூறியுள்ளதாவது:

ஒரு வேண்டுகோள். 'தளபதி 61' மிகுந்த முயற்சியோடும், கடின உழைப்பாலும் உருவாகிக் கொண்டிருக்கும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம். தவறான செய்தியாலும், சில வியப்பூட்டும் செய்திகளையும் வெளியிடுவது படத்தை பாதிக்கும் செயல்களாக அமைகிறது. எனவே உரிய தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ தகவல் இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தவறாக பரப்ப வேண்டாம், என்று உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம். தளபதியின் ரசிகர்களுக்கு அனேக வியப்பூட்டும் விஷயங்கள் காத்திருக்கின்றன. என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

பெண் சாதனையாளர் விருது கொடுத்த அமைப்பிடம் நயன்தாரா மன்னிப்பு கேட்டது ஏன்?

சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சாதனை செய்த பெண்களுக்கு 'பெண் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டின் இந்த விருதுக்கு கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன் பிரபல இயக்குனர் வைத்த கோரிக்கை

'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் வைத்துள்ள கோரிக்கையின் விபரம் பின்வருமாறு:

பாடகி சுசித்ரா எங்கே?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் கோலிவுட் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகின. ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பக்கத்தில் வெளியான வீடியோவினால் கோலிவுட் திரையுலகில் இதுவரை ஏற்படாத பரபரப்பு ஏற்பட்டது...

ரஜினியால் தூக்கத்தை தொலைத்த 'மாநகரம்' இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகிற்கு புதியதாக வரும் திறமைசாலிகளை பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாதவர்.

கமல்ஹாசன் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! 3 பேர் கைது

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகிற்காகவே பிறந்தவர். இரண்டு மூன்று படங்கள் நடித்த நடிகர்கள் கூட ஓட்டல், ரியல் எஸ்டேட் என சம்பாதித்த பணத்தை வேறு துறைகளில் முதலீடு செய்து வரும் நிலையில் 50 ஆண்டுகளாக சினிமாவில் தன்னுடைய உழைப்பில் கிடைத்த பணம் முழுவதையும் சினிமாவுக்காக மட்டுமே செலவு செய்யும் ஒரே நடிகர்.