கொரோனா முடிந்ததும் என் முதல் வேலை இதுதான்: அஞ்சலி

  • IndiaGlitz, [Tuesday,July 14 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் என்பதும் இதனையடுத்து அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய பழைய புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் கொரோனா விடுமுறை நாளில் இருந்து தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி.

இந்த நிலையில் அவர் நேற்று ஒரு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு பெரிய கட்டிடத்தின் முன் ஆட்டம் போடுவது போல் உள்ளது. அதில் அவர் .இந்த கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் முதலில் வெளியே வந்து இதேபோன்று ஆட்டம் போட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் அனுஷ்காவுடன் அஞ்சலி நடித்த ‘நிசப்தம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும், அதனையடுத்து அவர் ’நேர் கொண்ட பார்வை’ தெலுங்கு ரீமேக் படமான ‘வாகேல் சாஹிப்’ படத்திலும் தமிழில் ’காண்பது பொய்’, ’ஓ’, ’பிக்பாஸ்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

முதல்வர் பழனிசாமியின் கொரோனா சோதனை ரிசல்ட்: பரபரப்பு தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: கொரோனாவின் கொடூர முகம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம்

திரையுலகில் இல்லாத விஜயகுமாரின் ஒரே மகள்!: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் குடும்பத்திலுள்ள அனைவருமே கிட்டத்தட்ட திரையுலகில் இருக்கும் நிலையில் அவரது ஒரே ஒரு மகள் மட்டும் திரை உலகிலிருந்து சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார்

'டாக்டர்' படத்தின் புதிய அப்டேட்: 2 நிமிட வீடியோ வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் 'டாக்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்!!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் கொள்ளைச் சம்பவங்கள்!!!

கேரள அரசியலுக்கே உலை வைக்கும் அளவிற்கு தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்வப்னா சுரேஷ் பற்றிய தேசிய புலனாய்வு முகமை (NIA) தற்போது பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.