ரஜினிக்காக குரல் கொடுத்த ஒரு மில்லியன் பேர் யார் யார்?

  • IndiaGlitz, [Monday,April 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை இரவு 7 மணிக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 9ஆம் தேதியும் வெளிவரவுள்ளது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் ஜூன் 7ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக ஒருமில்லியன் குரல்களை பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடலில் ஒரு மில்லியன் குரல்களை பயன்படுத்த வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், அது காலாவில் பொருத்தமாக இருந்ததால் இந்த படத்தில் அமைந்துவிட்டது என்றும், இந்த பாடலுக்காக ஒரு மில்லியன் குரலை எப்படி பதிவு செய்தேன் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்' என்றும் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

ஒரே பாடலில் ஒரு மில்லியன் குரல்கள் ஒலிப்பது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயமாக இருக்கும் நிலையில் இந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை கேட்க வரும் 9ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் பிரபல நடிகரின் தமிழ்ப்படம்

ஒரு படத்தை தயாரிப்பது எந்த அளவுக்கு சிரமமோ அதைவிட பல மடங்கு சிரமமான காரியமாக உள்ளது அந்த படத்தை ரிலீஸ் செய்வது. சரியான காலம்,

ரசிகர்களை முட்டாளாக்கி வச்சிருக்கோம்: பாரதிராஜா

பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில மாதங்களாக ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அடுத்த தமிழக முதல்வர் யார்? கமல் சகோதரர் கணிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் உள்ளதாகவும்,

'காலா' ஃப்ரஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

அஜித் பிறந்த நாளில் 'எருமைச்சாணி' குழுவினர்களின் ஃபர்ஸ்ட்லுக்

எருமைச்சாணி' என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலை அனேகமாக தெரியாதவர்கள் இருக்க முடியாது. வித்தியாசமான வீடியோக்கள் பதிவு செய்யப்படும்