close
Choose your channels

ரஜினிக்காக குரல் கொடுத்த ஒரு மில்லியன் பேர் யார் யார்?

Monday, April 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிக்காக குரல் கொடுத்த ஒரு மில்லியன் பேர் யார் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை இரவு 7 மணிக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 9ஆம் தேதியும் வெளிவரவுள்ளது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் ஜூன் 7ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக ஒருமில்லியன் குரல்களை பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடலில் ஒரு மில்லியன் குரல்களை பயன்படுத்த வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், அது காலாவில் பொருத்தமாக இருந்ததால் இந்த படத்தில் அமைந்துவிட்டது என்றும், இந்த பாடலுக்காக ஒரு மில்லியன் குரலை எப்படி பதிவு செய்தேன் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்' என்றும் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

ஒரே பாடலில் ஒரு மில்லியன் குரல்கள் ஒலிப்பது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயமாக இருக்கும் நிலையில் இந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை கேட்க வரும் 9ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.